(179)

(179)

மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்

மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ

தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட

மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா வேலை யடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.

பதவுரை

மின்

மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை

இடையையுடைய
சீதை பொருட்டா

ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்

லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான  ராவணனுடைய
மணிமுடி பத்தும்

ரத்நகிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ

ஒருசேர அற்றுவிழும்படி
தன்நகர் ஒன்று இல்லா

தனக்கு ‘மாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை

வில்லை
கால் வளைத்து இட்ட

கால்வளையும்படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு

விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு

ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிராட்டியை மீட்டுக் கொணர்வதற்காகக் கடலிலே அணைகட்டி இலங்கை சென்று இராவணனை யழித்தவனான இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.

English Translation

The radiant-crown Lord build a bridge over the ocean and wielded his bow to fell the ten heads of Lanka’s king Ravana, for the sake of his thin-waisted Sita. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top