(1787)
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே.
பதவுரை
|
பொன் அலரும் புன்னை சூழ் |
– |
பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற |
|
அம்மானை |
– |
எம்பெருமான் விஷயத்திலே |
|
மின் இடையார் |
– |
மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள் |
|
வேட்கை நோய் கூர |
– |
ஆசை நோய் மிகும்படியாக |
|
இருந்தனை |
– |
இருக்கும் நிலைமையைப் பற்றி |
|
கல் நவிலும் திண்தோள் கலியன் |
– |
மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச் செய்த இப்பாசுரங்களை |
|
வல்லார் |
– |
கற்று வல்லவர்கள் |
|
மன்னவர் ஆய் |
– |
அரசர்களாகி |
|
மண் ஆண்டு |
– |
பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு) |
|
வான் நாடும் |
– |
பரமபத நாட்டிற்கும் |
|
உன்னுவர் |
– |
விரைந்தெழுவர் |
English Translation
This is a garland of songs on the love-sickness of a lightning-thin-waisted dame for the Lord of Pullani surrounded by gold-blossom Punnai groves, by strong-armed kaliyan. Those who master it will rule the Earth, then heaven as well
