(1743)

(1743)

ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,

பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது

சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ

காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்துறையம்மானே!- ;

உன்

உன்னுடைய

சே அடி

திருவடிகளை

ஏத்தி

துதித்து

எண்ணி இருப்பாரை

சிந்தித்திருக்குமவர்களை

நமன் தமர்

யமபடர்கள்

பார்த்து இருந்து

உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து

அங்கு

அந்த சரமஸமயத்தில்

பற்றாது

வந்து கிட்டமாட்டாமல்,

சோத்தம்

“நமஸ்காரம்,

நாம் அஞ்சுவதும்

நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்”

என்று

என்று சொல்லி

தொடாமை

தொடுதலும் செய்யாதபடி

நீ காத்தி போன்ம்

ரக்ஷித்தருளுகிறாயன்றோ.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! நீ என் குற்றங்களைப் பாராதே என்னைக் கைக்கொண்டருள்வது மாத்திரம் போராது; செய்த குற்றங்களை ஆராய்வதற்கென்று நீ நியமித்துள்ள யமன் முதலானாரும் என்னருகுவராதபடி நோக்கியருளவேணுமென்று பிரார்த்தித்தல் இப்பாட்டின் உள்ளுறை.

 

English Translation

O Lord of kannapuram! Devotees praise and contemplate your lotus feet always; when yama’s agents wait to take them, they close in, but fear to touch and return saluting!  Are you not the guardian of their spirits?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top