(1737)
செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்
கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை
இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,
வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே.
பதவுரை
|
கரு |
– |
கர்ப்பத்தில் |
|
நீர் |
– |
நீர்கொண்ட |
|
முகில் |
– |
மேகம் போன்ற |
|
வண்ணன் |
– |
திருநிறத்தையுடையரான |
|
கண்ணபுரத்தானை |
– |
சௌரிப்பெருமாள் விஷயமாக,- |
|
செரு நீர வேல் வலவன் |
– |
யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும் |
|
மங்கையர் கோன் |
– |
திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார் (அருளிச்செய்த) |
|
இரு நீர் |
– |
மிக்க நீர்மையையுடைய |
|
இன் தமிழ் |
– |
இனிய தமிழினாலாகிய |
|
இன் இசை |
– |
இனிய இசையையுடைய |
|
இவை மாலைகள் கொண்டு |
– |
இச்சொல் மாலைகளைக் கொண்டு |
|
தொண்டீர் |
– |
தொண்டர்களே! |
|
வரு நீர் வையம் உய்ய |
– |
கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி |
|
பாடி |
– |
வாயாரப்பாடி |
|
ஆடுமின் |
– |
மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள் |
.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகவத்பக்திமிகுந்து தொண்டர்களென்று பெயர் பெற்றவர்களை விளி்த்து, நீங்கள் இத்திருமொழியைப் பாடியாடுங்கோள்; உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும் – என்றாராயிற்று.
வருநீர்வையம் – கடல் சூழ்ந்த பூமியிலே, உய்ய – நீங்கள் உஜ்ஜீவிக்கும்படி, இவைபாடி யாடுமின் என்னவுமாம்.
English Translation
This is a garland of sweet Tamil songs sung with feeling by sharp-spear-wielding Mangai-king kalikanri on the Lord of kannapuram, dark as the water lily. Devotees! sing them and dance let the ocean-girdled Earth be filled with joy.
