(1735)
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை
வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே.
பதவுரை
|
கற்றார் |
– |
விவேகிகள் |
|
பற்று அறுக்கும் |
– |
‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான |
|
பிறவி பெருகடலே |
– |
ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே |
|
பற்றா |
– |
போக்யமாகப் பற்றி |
|
அடியேன் வந்து பிறந்தேன் |
– |
(இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன் |
|
பிறந்த பின்னை |
– |
இப்படி பிறந்து வருமடைவிலே, |
|
வற்றா நீர் வயல் சூழ் |
– |
ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட |
|
வயலாலி |
– |
‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற |
|
அம்மானை |
– |
எம்பெருமானை |
|
பெற்றேன் |
– |
ப்ராப்தனானேன், |
|
பெற்றதுவும் |
– |
அவனைப்பெற்றவாறே |
|
பிறவாமை பெற்றேன் |
– |
மறுபிறப்பில்லாமை பெற்றேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன்னை மறக்கமுடியாதபடி எம்பெருமான் உமக்குப் பண்ணித்தந்த உபகாரந்தான் ஏதென்ன, தன்னுடைய அநுபவத்துக்கு இடையூறு வராதபடி பண்ணித்தந்த மஹோபகாரகனன்றோ வென்கிறார்.
“பிறவாமைப் பெற்றேனே” என்பதற்குப் பலபடி பொருளருளிச் செய்வர்; பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானங் காண்மின் – “இப்பேற்றுக்கு விச்சேதத்தைப் பண்ணக்கடவ ஜன்மம் மறுவலிடாதபடி பெற்றேனென்னுதல்; அன்றிக்கே இப்பேற்றுக்கடியாக என்பக்கல் ஒரு நன்மை பிறவாதிருக்கச் செய்தே பெற்றேனென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, பெற்றேனென்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாதபடி பெற்றேனென்னுதல். உபகாரஸ்ம்ருதி அநுவர்த்தித்தவன்று ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்பட வேண்டும்படி யிருக்குமிறே; அது வேண்டாதே ‘ப்ராப்தம் இது’ என்றிருக்கும்படி உபகரித்தானாயிற்று.” என்று. இனிப் பிறப்பில்லாமையைப் பெற்றேன் என்பது முதல் அர்த்தம்; (என்னிடத்தில் ஒரு ஹேதுவும்) பிறவாமல் பேறுபெற்றேன் என்பது இரண்டாவது அர்த்தம்; நன்றியறிவும் பிறவாமலே பேறுபெற்றேன் என்பது மூன்றாவது அர்த்தம்.
English Translation
I took birth in a vast ocean of nescience, with no love for the learned ones. Then when I was born again, the Lord of fertile Vayalali gave me his grace, and freed me from rebirth.
