(1710)

(1710)

புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,

மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,

முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,

கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

முயல் துளர்

முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய

மிளை

சிறுதூறுகளில் நின்றும்

முயல்

முயல்களானவை

துள

துள்ளவும்,

வளம்

செழிப்பாக

விளை

விளைகின்ற

வயல்

கழனிகளிலே

கயல்

கயல்மீன்கள்

துளு

துள்ளவும் பெற்ற

கணபுரம்

திருக்கண்ணபுரமானது,-

புயல் உறு

பெருங்காற்றோடு கூடின

வரை மழை

கல் மழை

பொழிதர

பொழியுமளவில்

மணி நிரை

அழகிய பசுக்கள்

மயல் உற

கலங்கி நிற்க (அப்போது)

வரை

(கோவர்த்தன) மலையை

குடை

குடையாக

எடுவிய

எடுத்த

நெடியவர்

மஹாபுருஷனான

அடிகள் தம்

ஸ்வாமியினுடைய

இடம்

திவ்ய தேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- களைபறிக்கிறவர்கள் களைக்கொட்டுகளைக் கொண்டு வியாபரிக்கு மளவிலே சிறுதூறுகளில் நின்றும் புறப்பட்ட முயல்கள் அவர்களது முகத்திலே துள்ளவும், செழிப்பு மிக்க வயல்களிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல் மீன்கள் துள்ளவும் பெற்ற திருக்கண்ணபுரம் – பண்டு இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழுநாள் கல்மழை பெய்வித்த காலத்துக் கோ நிரைகள் கலங்கிநிற்க அக்கலக்கந் தீருமாறு கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப்பிடித்த பெருமானுறையுமிடம் என்பதாம்.

 

English Translation

The Lord who lifted a mountain and protected the swooning cows against a hailstorm resides in kannapuram amid hills where the harvesters sickle brings out rabbits from their burrows and fertile fields where kayal-fish dance enchanted.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top