(1704)
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
கொலை ஆர் வேழம் |
– |
கொலைத் தொழிலை இயற்கையாக வுடைய யானை (கஜேந்திராழ்வான்) |
|
இலை ஆர் |
– |
இலைகள் நிரம்பிய |
|
மலர் |
– |
மலர்களையுடைத்தான |
|
பூ |
– |
அழகிய |
|
பொய்கை வாய் |
– |
தடாகத்திலே |
|
முதலை தன்னால் |
– |
முதலையினால் |
|
அடர்ப்புண்டு |
– |
துன்பமடைந்து |
|
கடுக்குற்று |
– |
நடுங்கி |
|
குலைய |
– |
கையோய்ந்து நிற்க, |
|
அதனுக்கு |
– |
அவ்யானைக்கு |
|
அருள் புரிந்தான் |
– |
கிருபைபண்ணி யருளினவனும், |
|
அலை நீர் இலங்கை |
– |
கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான |
|
தசக்ரீவற்கு |
– |
இராவணனுடைய |
|
இளையோற்கு |
– |
தம்பியான விபீஷணனுக்கு |
|
அரசை அருளி |
– |
லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும் |
|
முன் |
– |
அதற்கு முன்பே |
|
கலைமா |
– |
(மாரீசனாகிற) மானை |
|
சிலையால் |
– |
ஒரு வில்லாலே |
|
எய்தான் |
– |
அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய |
|
ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-. |
||
|
தசக்கிரீவன் |
– |
வடசொல் விகாரம். |
English Translation
The devotee elephant king Gajendra entered the lotus lake unaware. Caught by a crocodile he wept and was saved by the Lord’s grace. He gave the kingdom of Lanka to the younger brother Vibhishana. He resides in kannapuram, O come, let us worship.
