(1702)
ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
ஆமை ஆகி |
– |
கூர்மரூபியாயும் |
|
அரி ஆகி |
– |
நரஸிம்ஹரூபியாயும் |
|
அன்னம் ஆகி |
– |
ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்) |
|
அந்தணர் தம் |
– |
பிராமணர்களினுடைய |
|
ஓமம் ஆகி |
– |
யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும் |
|
ஊழி ஆகி |
– |
பிரளயகாலத்திலு முள்ளவனும் |
|
நெடு புணரி |
– |
ஓங்கின அலைகளையுடைத்தான |
|
உவரி |
– |
கடலினால் |
|
சூழ்ந்த |
– |
சூழப்பட்டதும் |
|
சேமம் மதிள் சூழ் |
– |
காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான |
|
இலங்கை |
– |
லங்காபுரிக்கு |
|
கோன் |
– |
தலைவனான இராவணனுடைய |
|
சிரமும் |
– |
தலைகளையும் |
|
கரமும் |
– |
தோள்களையும் |
|
துணித்து |
– |
அறுத்தொழித்தவனும், |
|
முன் |
– |
முன்பொருகால் |
|
காமன் |
– |
மன்மதனை |
|
பயந்தான் |
– |
பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான் |
|
கருதும் |
– |
திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற |
|
ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘ஹோமம் :’ என்னும் வடசொல் ஓம மெனத் திரிந்தது; லக்ஷணையால், யாகங்களிலிடும் ஹவிஸஸுக்களைக் கொள்பவன் என்றவாறு. ‘உலகு சூழ்ந்த நெடும் புணரி’ என்று பெரும் பாலும் வழங்கி வரும் பாடம் வியாக்கியானத்தில் பாடாந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது. “உவரி சூழ்ந்த நெடும்புணரி” என்றோதுக. புணரி – அலைக்கும் கடலுக்கும் பெயர்; இங்கு அலையைச் சொல்லக்கடவது. ‘நெடும்புணரி உவரி சூழ்ந்த சேமமதிள் சூழிலங்கை’ என்று அந்வயிப்பது. உவரி – கடல் சேமம் – க்ஷேமம். சிரம், கரம் – வடசொற்கள்.
கண்ணன் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதலால் காமற்ப யந்தானாயினன்.
English Translation
O Hearth! The Lord who came in the yore as a furtile, a man-lion, and a swan, is the Lord of the vedic fire sacrifice and the four yugas; he crossed over into the oean-girdled Lanka city and cut as under the heads and arms of the mighty Rakshasa king; he is the father of Madana, and resident of kannapuram. Come let us worship.
