(1667)
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.
பதவுரை
|
கார் மலி |
– |
மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற |
|
கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற |
|
எம் அடிகளை |
– |
எம்பெருமானைக் குறித்து |
|
பார் மலி மங்கையர் கோன் பரகாலன் |
– |
இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார் |
|
சொல் |
– |
அருளிச்செய்த |
|
சீர் மலி |
– |
பகவத்குணங்கள் நிறைந்த |
|
பாடல் |
– |
பாசுரங்கள் |
|
இவை பத்தும் |
– |
இத்திருமொழியை |
|
வல்லவர் |
– |
கற்றுணரவல்லவர்கள் |
|
நீர் மலி |
– |
கடல் சூழ்ந்த |
|
வையத்து |
– |
இப் பூண்டலத்திலே |
|
நீடு |
– |
நீண்டகாலம் |
|
நிற்பார்கள் |
– |
நிலைநிற்கப் பெறுவர். |
English Translation
This garland of excellent Tamil songs on the Lord of rain-abundant kannpuram is by the world-famous Mangai king parakalan. Those who master it will live long on Earth.
