(1661)
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.
பதவுரை
|
உண்ணும் நாள் இல்லை |
– |
இவள் ஒருநாளும் உண்பதில்லை; |
|
உறக்கம் தானும் இல்லை |
– |
கண்ணுறங்குவது மில்லை; |
|
பெண்மையும் சால நிறைந்திலள் |
– |
நன்றாக முதிர்ந்த பெண்மைப் பருவமுடையளல்லள்; |
|
பேதை தான் |
– |
இளம் பெண்தான்; (இப்படியிருக்கச் செய்தேயும்) |
|
கண்ணன் ஊர் |
– |
எம்பெருமானுடைய திவ்யதேசமாகிய |
|
கண்ணபுரம் |
– |
திருக்கண்ணபுரத்தை |
|
தொழும் |
– |
தொழாநின்றாள்; |
|
இவட்கு எண்ணம் |
– |
இவளுடைய எண்ணம் |
|
கார் கடல் வண்ணர்மேல் |
– |
கரிய கடல் போன்ற நிறத்தை யுடையரான சௌரிப் பெருமாள் மேலுள்ளது; |
|
இது என் கொல் |
– |
இது என்ன ஆச்சரியம்!, |
English Translation
No day is a day of non-fasting for her, no night is a night no-vigil. She is just a child barely into her maidenhood, yet she keeps saluting her Krishna’s abode of kannapuram. He thoughts are always on the dark-ocean-huel Lord. Woe! what is all this?
