(1657)
மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே.
பதவுரை
|
மா வளரும் மென் நோக்கி |
– |
மானினுடைய நோக்குப் போன்று விசாலமாய் மெல்லிதான நோக்கை யுடையளான |
|
மாதராள் |
– |
(பரகால) நாயகியானவள் |
|
மாயவனை கண்டாள் என்று |
– |
ஆச்சரியனான எம்பெருமானைக் கண்டாள் கொலோ என்று |
|
கா வளரும் கடி பொழில் சூழ் |
– |
சோலைகளில் வளரும் பரிமளமானது பூமியெங்கும் பரவப்பெற்ற |
|
கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியுள்ள |
|
அம்மானை |
– |
ஸ்வாமியைக் குறித்து |
|
கலியன் சொன்ன |
– |
திருமங்கையாழ்வாரருளிச் செய்த |
|
பா வளரும் |
– |
சந்தங்கள் நிறைந்திருக்கப் பெற்ற |
|
தமிழ் மாலை |
– |
தமிழ்ப் பாசுர மாலையாகிய |
|
பன்னிய நூல் |
– |
கொண்டாடுதற்கு உரிய இத்திவ்ய ப்ரபந்தத்திற் சேர்ந்த |
|
இவை ஐந்தும் ஐந்தும் |
– |
இப்பத்துப் பாட்டையும் |
|
வல்லார் |
– |
ஓதியுணரவல்லவர்கள் |
|
பூ வளரும் |
– |
பூக்கள் நிறைந்த |
|
கற்பகம் சேர் |
– |
கல்ப வ்ருக்ஷம் பொருந்திய |
|
பொன்னுலகில் |
– |
பரமபதத்தில் |
|
மன்னவர் ஆய் |
– |
நிர்வாஹகர்களாகவும் |
|
புகழ் தக்கோர் |
– |
(இங்குள்ளவரையில்) புகழ்க்குத் தகுதியுடையவர்களாகவும் இருக்கப் பெறுவர். |
|
அடிவரவு |
– |
சிலை, செரு, துன்னு, தார், அடி, பேர், செவ்வரத்த, கொற்ற, வண்டு, மாவளரும், தெள்ளியீர். |
English Translation
This garland of sweet songs by kaliyan recalls a mother’s lament on her town-eyed daughter’s seances with the Lord of fragrant-grove-surrounded kannapuram. Those who master it will be as formed kings of the kolpka-blossom spilling heavens.
