(1654)

(1654)

செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,

அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,

மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,

கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

செம் வரத்த உடை ஆடை

சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (என்றும்)

அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள்

அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்;

அவ் வரத்த அடி இணையும்

அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்

அம் கைகளும்

அழகிய திருக்கைகளும்

பங்கயமே என்கின்றாள்

தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;

மை வளர்க்கும் மணி உருவம்

நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி

மரதகமோ

மரதகமணியோ,

(அன்றி,)

மழை முகிலோ

காளமேகமோ

என்கின்றாள் ஆல் – ;

கை வளர்க்கும் அழல் ஆளர்

தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற

கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-

 

English Translation

“He wears a red coloured vesture on his frame and a golden cummerbund over it”, she says, then, “Oh, the feet are of the same hue, even his lotus hands are of that hue”.  “The dark due of his gem-like frame, -is it emerald, or is it rain cloud?”, she cries, I wonder of she has seen the Lord of kannapuram where Vedic seers offer fire oblations, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top