(136)

(136)

அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்

செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே

அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம

அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.

பதவுரை

அம்ம

தலைவனே!

(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னையடைந்த)

அங்கு

அக்காலத்திலே
விம்ம

(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு

(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த

(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே

தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்

அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால்போல்

அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்

செந்தாமரை மலர்போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப

வியர்த்துப்போக
இ முற்றத்தூடே

இந்த முற்றத்திலேயே
தீமை செய்து

தீம்பைச் செய்துகொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக

உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா

புழுதியளையாதே;
முலை உணாய்

முலையுண்ணவாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

புழுதியளையாமல் முலையுண்ண வாராய் என்கிறாள்.  செந்தாமரை போன்ற திருமுகத்திலே வியர்வைத் துளிகள் அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார்.  முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

English Translation

My Master! Do not play mischief and go all over the yard picking up dust, with sweat forming over your flower-like face like pearls of dew on a fresh lotus flower.  O king of gods, there in the Milky Ocean, You gave nectar to the gods.  Now come and take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top