(136)
அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம
அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.
பதவுரை
| அம்ம |
– |
தலைவனே! |
|
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னையடைந்த) |
||
| அங்கு |
– |
அக்காலத்திலே |
| விம்ம |
– |
(அவர்கள் வயிறு) நிரம்பும்படி |
| அமரர்க்கு |
– |
(அந்த) தேவர்களுக்கு |
| அமுது அளித்த |
– |
(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த |
| அமரர் கோவே |
– |
தேவாதிராஜனே! |
| அம் கமலம் போது அகத்தில் |
– |
அழகிய தாமரைப் பூவினுள்ளே |
| அணி கொள் முத்தம் சிந்தினால்போல் |
– |
அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி |
| செம் கமலம் முகம் |
– |
செந்தாமரை மலர்போன்ற (உனது) முகமானது |
| வியர்ப்ப |
– |
வியர்த்துப்போக |
| இ முற்றத்தூடே |
– |
இந்த முற்றத்திலேயே |
| தீமை செய்து |
– |
தீம்பைச் செய்துகொண்டு |
| அங்கம் எல்லாம் புழுதி ஆக |
– |
உடம்பெல்லாம் புழுதி படியும்படி |
| அளைய வேண்டா |
– |
புழுதியளையாதே; |
| முலை உணாய் |
– |
முலையுண்ணவாராய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
புழுதியளையாமல் முலையுண்ண வாராய் என்கிறாள். செந்தாமரை போன்ற திருமுகத்திலே வியர்வைத் துளிகள் அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார். முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.
English Translation
My Master! Do not play mischief and go all over the yard picking up dust, with sweat forming over your flower-like face like pearls of dew on a fresh lotus flower. O king of gods, there in the Milky Ocean, You gave nectar to the gods. Now come and take suck.
