(134)

(134)

பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே

கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி

வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி

கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.

பதவுரை

கண்டவர்கள்

(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்

(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை

உன்னைப்போன்ற குழந்தைகளை
பெறுதும்

பெறுவோம் (பெறவேணும்)
என்னும்

என்கிற
ஆசையாலே

ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்

(உன்னைவிட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்

வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ

புஷ்பங்களையணிந்த
குழலினார்

கூந்தலையுடையவர்கள்
கண் இணையால்

(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி

(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்

உன்னுடைய
வாய் அமுதம்

அதராம்ருதத்தை
உண்ண வேண்டி

பாநம்பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்

(உன்னை) எடுத்துக்கொண்டு போவதற்கு
வந்து நன்றார்

வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா

கோவிந்தனே!

நீ முலை உணாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும் பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க.  அவற்றில் வேண்டினபடி ஆகிறது.  இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள்.  பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி.  பெறுதும் – தன்மைப்பன்மை வினைமுற்று.  ஆஸா – வடசொல்.  கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

English Translation

Passing housewives stop when they see you, filled with a desire to beget a child like you.  Bee-humming flower-coiffured girls roll their eyes over you and come to take you, to drink the nectar from your lips.  O Govinda, come take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top