(134)
பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி
வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.
பதவுரை
| கண்டவர்கள் |
– |
(உன்னைப்) பார்த்தவர்களான |
| பெண்டிர் வாழ்வார் |
– |
(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள் |
| நன் ஒப்பாரை |
– |
உன்னைப்போன்ற குழந்தைகளை |
| பெறுதும் |
– |
பெறுவோம் (பெறவேணும்) |
| என்னும் |
– |
என்கிற |
| ஆசையாலே |
– |
ஆசையினாலே |
| போக்கு ஒழிந்தார் |
– |
(உன்னைவிட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்; |
| வண்டு உலாம் |
– |
வண்டுகள் ஸஞ்சரிக்கிற |
| பூ |
– |
புஷ்பங்களையணிந்த |
| குழலினார் |
– |
கூந்தலையுடையவர்கள் |
| கண் இணையால் |
– |
(தமது) இரண்டு கண்களினாலும் |
| கலக்க நோக்கி |
– |
(உனது) திருமேனி முழுவதும் பார்த்து |
| உன் |
– |
உன்னுடைய |
| வாய் அமுதம் |
– |
அதராம்ருதத்தை |
| உண்ண வேண்டி |
– |
பாநம்பண்ண ஆசை கொண்டவர்களாய் |
| கொண்டு போவான் |
– |
(உன்னை) எடுத்துக்கொண்டு போவதற்கு |
| வந்து நன்றார் |
– |
வந்து நிற்கிறார்கள்; |
| கோவிந்தா |
– |
கோவிந்தனே! |
|
நீ முலை உணாய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும் பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க. அவற்றில் வேண்டினபடி ஆகிறது. இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள். பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி. பெறுதும் – தன்மைப்பன்மை வினைமுற்று. ஆஸா – வடசொல். கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.
English Translation
Passing housewives stop when they see you, filled with a desire to beget a child like you. Bee-humming flower-coiffured girls roll their eyes over you and come to take you, to drink the nectar from your lips. O Govinda, come take suck.
