(1344)
ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு,
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தரு ள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே!
பதவுரை
|
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த |
– |
(வேண்டுவோர்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற சிறந்த காரியத்தைச் செய்யக் கடவேனென்று ஸங்கல்பித்துக்கொண்ட |
|
மாவலி |
– |
மஹாபலியினுடைய |
|
வேள்வியில் |
– |
யாகத்திலே |
|
தௌ;ளிய குறள் ஆய்புக்கு |
– |
தெளிவுள்ள வாமந மூர்த்தியாய்க்கொண்டு பிரவேசித்து |
|
மூ அடி கொண்டு |
– |
(அந்த மாவலியிடமிருந்து) மூவடி நிலத்தை இரந்து பெற்று |
|
திக்கு உற வளர்ந்தவன் கோயில் |
– |
எல்லாத் திசைகளிலும் வியாபிக்கும்படியாக வளர்ந்த பெருமான் வாழுமிடம் (எதுவென்றால்); |
|
அள்ளி அம் பொழில் வாய் |
– |
தாதுகளையுடையனவாய் அழகியவான சோலைகளிலே |
|
இருந்து வாழ் |
– |
இருந்துகொண்டு மகிழ்கிற |
|
குயில்கள் அவை |
– |
குயில்களானவை |
|
அரி அரி என்று அழைப்ப |
– |
‘ஹாரிர் ஹாரி:’ என்று கூவப்பெற்றதாய், |
|
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் |
– |
சுக்கிரன் வந்து உபாஸனை பண்ண அவனுக்கு விரைவில் அருள்செய்த பெருமானுடையதான |
|
திரு வெள்ளியங்குடி அதுவே |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘யாகம் செய்தல்’ என்றொரு வியாஜத்தையிட்டு ‘என்னுடைய ஸர்வஸ்வத்தையும் பிறர்க்கு உரித்தாக்கக் கடவேன்’ என்று ஸங்கல்பித்துக்கொண்ட மஹாபலியின் யஜ்ஞபூமியில் வாமநப்ரஹ்மசாரியாய்ச்சென்று மூவடிநிலம் இரந்து பெற்றுத் திசைகளெல்லாம் விம்மவளர்ந்த பெருமான் வாழுமிடம் திருவெள்ளியங்குடி. முதலடியில் ‘உணர்ந்து’ என்றும் பாடமுண்டு; அப்போது, ‘மாவலியானவன் வேண்டுவார்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற நற்காரியஞ் செய்கிறானென்று தெரிந்துகொண்டு அவனது வேள்விக் கெழுந்தருளி’ என்று பொருளாம்.
(அள்ளியம் பொழில்வாய் இத்யாதி.) எதுகைநயம் நோக்கி அல்லியை அள்ளியென்ற தாகக் கொள்க. அன்றியே, ‘அளி’ என்பதை அள்ளியென்று விரித்துக்கிடப்பதாகவுங்கொள்வர்: குளிர்ச்சி பொருந்திய என்றபடி. திவ்யதேசத்தில் வாழுங் குயில்களாகையாலே அங்குள்ள பாகவதர்களின் அநுஸந்தானமே அவற்றுக்கும் அமைந்து ‘ஹாரிர்ஹாரி: ஹாரிர்ஹாரி:’ என்று சோலைத்தடங்களிலே கூவுகின்றனவாம்.
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் = “என்னை வெள்ளுரியராக்கவல்ல” என்னுமாபோலே சுத்தஸாத்விகர்களை வெள்ளியாரென்றதாகக்கொண்டு, அவர்கள் வந்து ஆச்ரயிக்க அவர்கட்கு விரைவில் அருள் செய்பவன் வாழுமிடம் என்பதாகக் கொள்ளலாம். அன்றியே, அஸுரகுருவான சுக்கிரன் இத்தலத்தே உபாஸித்துப் பேறு பெற்றானென்று இதிஹாஸம் சொல்லிப் போருவதுண்டாகையாலே அதற்குச்சேர, வெள்ளியார் என்பதற்கு, ‘சுக்கிரன்’ என்று பொருள்கொள்ளவுமாம். அங்ஙனுமன்றியே, உடலில் நீறு பூசிவெளுத்திருப்பவனான ருத்ரனைச் சொல்லிற்றாய் அவனுடைய பாதகத்தைப் போக்கினபடியைக் கூறுவதாகவு முரைப்பர்.
English Translation
Mabali was intent on collecting merit through good Karmas Going to his sacrifice as a beautiful manikin, the Lord asked for three steps of land and grew to cover the eight Quarters. He resides in the temple,- where the fertile groves are haunted by cuckoos which keep calling, “Hari, Hari’, pure souls offer worship, and the Lord showers his grace, -of Tiruvelliyangudi, that is it!
