(1336)

(1336)

எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,

சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,

இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே!

 

பதவுரை

இந்தளூரீர்!;

எந்தை தந்தை தம்மான் என்று என்று

என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில்

எமர் ஏழ் அளவும்

எமது முன்னோர்கள் எழுதலை முறையாக

வந்து நின்ற

தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற

தொண்டரோர்க்கே

அடியோங்கள் விஷயத்திலேயே

வாசி வல்லீர்

கணக்குப் பார்க்கின்றீர்;

ஆல்

ஐயோ!;

சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர்

எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்;

திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர்

திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர்

 

English Translation

O Lord of indalur! My father, and his fathers before him, for seven generations, have been faithfully serving you as our only master. Alas, you do not inquire of us; you neither stay in our thoughts, nor let us see your body’s hue even slightly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top