(1335)

(1335)

முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற*

பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*

பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*

இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!

 

பதவுரை

இந்தளூரீர்!;

வண்ணம் எண்ணுங்கால்

தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில்,

முன்னை வண்ணம்

முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம்

பாலின் வண்ணம்

பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்;

முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம்

எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம்

கொண்டல் வண்ணம்

காளமேகத்தின் நிறமான கருமையாம்;

பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி

பொன்னிறத்தையும் நிலமணி நிறத்தையு மொத்திருக்கின்ற (தேவரீருடைய திருமேனி)

இன்ன வண்ணம் என்று காட்டீர்

(கீழ்ச் சொன்ன நிறங்களுள்) இன்ன நிறமுடையதென்று தெரியக் காட்டியருளவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக்கொள்வன்;  த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவா ரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக்கொன்வன்.

இந்தளூரீர்! ஊமக்குப் பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ?  “இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.

 

English Translation

O Lord of Indolur! In the beginning you are white, in the end you are black, The colours in-between are red and yellow.  Alas, you do not let us see what colour you are now.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top