(1447)
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே.
பதவுரை
|
நறை செய் பொழில் மழை தவழும் |
– |
தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற |
|
நந்திபுரவிண்ணகரம் |
– |
நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை |
|
நண்ணி |
– |
அடைந்து |
|
உறையும் |
– |
அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து |
|
உறை கொள் புகர் ஆழி |
– |
உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும் |
|
சுரி சங்கம் |
– |
வலம்புரிச் சங்கத்தையும் |
|
அவை |
– |
மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும் |
|
அம் கை உடையானை |
– |
அழகிய திருக்கையிலுடையனான எம்பெருமானைக் குறித்து, |
|
கறை வளரும் |
– |
ரக்தக்கறை மிக்கிருப்பதும் |
|
ஒளி சேர் |
– |
ஒளிபொருந்தியதுமான |
|
வேல் |
– |
வேற்படையை |
|
வல்ல |
– |
ஆளவல்ல |
|
கலியன் ஒலி |
– |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த |
|
இவை மாலை |
– |
இத்திவ்யப் பிரபந்தத்தினுள் |
|
இவை ஐந்தும் ஐந்தும் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் |
|
முறையில் |
– |
கிரமப்படியே |
|
பயில வல |
– |
அதிகரிக்கவல்ல |
|
அடியவர்கள் |
– |
பக்தர்களுடைய |
|
கொடு வினைகள் முழுது |
– |
பாவங்களெல்லாம் |
|
அகலும் |
– |
நீங்கியொழியும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “உறைகொள் புகராழி” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்யும் ஸ்ரீஸூக்திகாண்மின் :- “விரோதி நிரஸநத்துக்குத் திருமங்கையாழ்வார் கையில் வேலுண்டானபின்பு திருவாழி உறையிட்டிருக்குங்காண்” என்று. கறைவளரும் வேல்வல்லவனான கலியனே விரோதிகளை வென்று உலகத்தை யாள்கின்றமையால் எம்பெருமானுடைய திருவாழிப் படைக்குக் காரியமில்லையாக, உறையிலிடவேண்டிற்றாயிற்றென்க, ஆழ்வாருடைய வேல் அப்படி உறையில் கிடக்கமுடியாது; சத்ருநிரஸநம்பண்ணின கறை கழுவுதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம்.
English Translation
This garland of ten songs, by sharp spear-wielder Kaliyan extol the Lord of discus and couch residing amid the fragrant groves of Nandipura Vinnagaram. Devotees who master it will be freed of terrible karmas.
