(1465)
தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
தீ வாய் |
– |
நெருப்பையுமிழ்கின்ற வாயையுடைய |
|
வல் |
– |
கொடிய |
|
வினையார் |
– |
பாவங்கள் |
|
சிறந்தவர் போல் |
– |
பந்துக்கள் போன்று |
|
உடன் நின்று |
– |
என்னோடு பிரியாமல் கலந்துநின்று |
|
மேவா வெம் நரகத்து இட உற்று |
– |
பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று |
|
விரைந்து வந்தார் |
– |
வெகுவேகமுடையனவா யிருக்கின்றன |
|
மூவா |
– |
கிழத்தனம் முதலிய விகாரங்களற்ற |
|
வானவர்தம் முதல்வா |
– |
தேவாதிதேவனே! |
|
மதிகோள் விடுத்த தேவா |
– |
சந்திரனுடைய க்ஷயரோகத்தைப் போக்கினதேவனே! |
|
திரு விண்ணகர் மேயவனே!- ; |
||
|
நின் அடைந்தேன்-, |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாசுரத்தில் இரண்டாமடியில் நெடுநாளாகவே ஒரு பாடப்பிழை நேர்ந்துள்ளது; “மேவா வெந்நரகத்து இடருற்று என்றே பலரும் ஓதுவர்; இப்பாடம் பொருளற்றது; “இடவுற்று என்பது “இடருற்று“ எனப் பிழைபட்டது. (அடியேனை) மேவா வெம் நரகத்துஇட (நரகத்திலே தள்ள) உற்று விரைந்து வந்தார் என்கை. கீழ்ப்பாட்டில் “ஆறாவெந்நரகத்தடியேனை இடக்கருதி“ என்றாப்போலே.
கீழ்ப்பாட்டில் ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) எழுவாய்; இப்பாட்டில் வல்வினையார் (பாபராசிகள்) எழுவாய். வல் என்ற அடைமொழி – அப்பாவங்கள் அவசியம் அநுபவித்தேதீரவேண்டுமவை என்பதைக் காட்டும். தீவாய் என்னும் அடைமொழி அவற்றின் கொடுமையைக் காட்டும். பலவகைத் துன்பங்கள் யுண்டுபண்ணுகின்றன வென்றபடி. சிறந்தவர் என்றது – உடன்பிறந்தோர் மக்கள் மனைவியர் முதலான உறவினரைச் சொன்னபடி. அவர்கள் ஒருகாலும் விட்டு நீங்காதவாறுபோல் இக்கொடிய பாவங்களும் எப்போதும் விட்டுப்பிரியாமலிருந்து கொண்டு என்னை நரகத்திலே தள்ளப்பார்க்கின்றனவென்றாராயிற்று
English Translation
O Lord residing in Tiruvinnagar! Pretending to be excellent friends, my wicked karmas only wall to send me to terrible hell. O, the first-cause Lord of gods, the three-gods-one! You rid the moon of his misery! I have come to your feet.
