(1324)

(1324)

நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்

தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு

சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.

 

பதவுரை

பாடகம் சேர் மெல் அடியாள்

பாதச்சிலம்பு அணிந்த மிருதுவான அடிகளையுடைய என் பெண்ணானவள்

நாடி என்தன் உள்ளம் கொண்டநாதன் என்றும்

தேடி வந்து என் மனதை இருப்பிடமாக் கொண்ட ஸ்வாமியென்றும்,

நால் மறைகள் தேடி என்றும் காணமாட்டா

நான்கு வேதங்கள் ஆராய்ந்து பார்த்து ஒருநாளும் காண முடியாத செல்வன் என்றும் – ஸ்ரீமான் எனறும்,

சிறை கொள் வண்டுசேடு உலவுபொழில் கொள் நாங்கை

சிறகுளையுடைய வண்டுகள் திரள்திரளாக உலாவப்பெற்ற சோலைகளை யுடைத்தான திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

தேவதேவன் என்று என்று ஓதி

தேவாதி தேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு

பார்த்தன் பள்ளி பாடுவாள்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பாதகடகம்” என்னும் வடசொல் பாடகம் எனச் சிதைந்தது; காலணிக்குப் பெயர்

 

English Translation

“He did seek and find me, then he took my heart and made me a slave!”, “Vedas try to reach him through their sacred chants and yet they never!”, “Bees abound in groves a Nangai, _Deva-deva Lord resides!”, My anklet-wearing tender-footed daughter sings of Parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top