(1404)
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
பதவுரை
|
சிந்தனையை |
– |
(எனது) மனோரதத்திற்கு விஷயமான விதமும் |
|
தவம் நெறியை |
– |
உபாயமார்க்கமா யிருப்பவனும் |
|
திரு மாலை |
– |
திருமகள் தொழுதனம் |
|
வடமலையை |
– |
திருவேங்கடமலைக்கு நிர்வாஹதனும் |
|
(அப்படியிருந்தும் அவ்விடத்தை விட்டு) |
||
|
வந்து |
– |
எழுந்தருளி |
|
எனது மனத்து |
– |
என்னுடைய நெஞ்சிலே |
|
பிரியாது இருந்த |
– |
ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும், |
|
வரி வண்டு ஆர் |
– |
அழகிய வண்டுகள் படிந்த |
|
கொந்து |
– |
பூங்கொத்துக்கள் |
|
அணைந்த |
– |
நெருங்கியிருக்கப்பெற்ற |
|
பொழில் |
– |
சோலைகளையுடைத்தான |
|
கோவல் |
– |
திருக்கோவலூரில் |
|
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை |
– |
உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான பெருமானை |
|
யான கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிந்தனையை = “ஒழிவில்காலமெல்லா முடனாய்மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டுநாம்” என்றாற்போலே உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவன் எம்பெருமானிறே. தவநெறியை = மநோரதித்தபடியே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெறுவிக்கும் உபாயபூதனும்தானே என்கை. கஜேந்திராழ்வான் கமலபுஸ்பார்ச்சகையாகிற கைங்கரியத்தைப் பண்ணப் பாரித்தும் அவனுடைய முயற்சி பயன்படவில்லையே; எம்பெருமானேயன்றோ பிரதிபந்தகநிவ்ருத்தியைச்செய்து கைங்கரியத்தை நிறைவேற்றுவித்துக்கொண்டான். ஆகையாலே உபாயமும் அவனே யென்கிறது.
அந்தணன் – அழகிய தண்மை பொருந்தியவன்; பரமதயாளு என்றபடி…
English Translation
The source of thought, the path of penance, the Lord of Sri, the resident of Northern Venkatam hills, the stealer of my heart-space, the Earth-straddling Vedic Student, the Lord of bee-humming fragrant groved Tirukkovolour, -I have seen him in Southern Arangam amid cool waters.
