(1323)
ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து
சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
பாலின் நல்ல மெல் மொழியாள் |
– |
பாலைக்காட்டிலும் மதுரமாய் மிருதுமான சொற்களையுடையளான என் பெண்ணானவள், |
|
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் |
– |
உலகம் முழுவதையும் (பிரளத்தில்) திருவயிற்றிலடக்கி (ப் பிறகு) வெளிப்படுத்திய ஸ்வாமி என்றும், |
|
நானிலம் சூழ் வேலை அன்ன |
– |
பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிற கடல்போன்ற |
|
கோலம் மேனி வண்ணன் என்றும் |
– |
அழகியதான திருமேனி நிறமுடையவ னென்றும், |
|
சேல் மேல் எழுத்து உகளும் வயல் கொள் நாங்கை |
– |
மீன்கள் மேலே எழும்பித் துள்ளாநிற்கப்பெற்ற கழனிகளையுடைய திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற |
|
தேவதேவன் என்று என்று ஓதி |
– |
தேவாதிதேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு |
|
பார்த்தன் பள்ளி பாடுவாள் –. |
||
English Translation
“Lord who swallowed all the worlds and brought them out in time again!” “Lord of dark adorable hue, like the ocean, -deep in a sleep!” “Dancing, set-fish fields in Nangai, “Deva-deva’s paradise!”, speech-of-milk-and-nectar sweet, my daughter sings of Parttan-Palli O!
