(1381)
விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே,
பதவுரை
|
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும் |
– |
துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற |
|
செல்வம் புனல் காவிரி சூழ் |
– |
திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட |
|
தென் அரங்கம் |
||
|
வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட |
– |
கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக |
|
வளைத்த வல்வில் தட கையவனுக்கு |
– |
வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு |
|
இடம் எனபர் |
||
English Translation
Oh, they say the Soutehrn Arangam, -Surrounded by waters that wash a wealth of elephant-fusks and fragrant Agli wood, is the abode of the Lord who wielded his heavy bow and destroyed the city of the Rakshasas.
