(1380)
பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
பதவுரை
|
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி |
– |
வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் |
|
அண்டம் நாறும் பொழில் |
– |
ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும் |
|
சூழ்ந்து அழகு ஆர் |
– |
சூழப்பட்டு அழகு பொருந்தியதான |
|
தென் அரங்கம்; |
||
|
பண்டு |
– |
முன்பொருகால் |
|
இ வையம் அளப்பான் சென்று – |
– |
இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய் |
|
மாவலி கையில் |
– |
மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை |
|
ஆழி தடம் கை கொண்ட |
– |
திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட |
|
குறளன் |
– |
வாமநமூர்த்தியினது |
|
இடம் என்பர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருக்காவிரித் தீர்த்தம் மதுவோடுகூடிப் பெருகும்; மதுவில் நசையாலே வண்டுகள் வந்து மொய்க்கும்: 1. “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து, ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே” என்றது காண்க
English Translation
Oh, they say the Southern Arangam, -Surrounded by waters that flow through beautiful groves wafting their fragrance everywhere, buzzing with bees that drink nectar and sing, -in the abode of the discus-wielding Lord who came as a manikin to Mabali’s sacrifice and took the Earth as a gift from him
