(1349)

(1349)

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,

பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,

பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!

 

பதவுரை

கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து

கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி

உலகம் கைப்படுத்து

ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும்

பொள்ளை கரத்த போதகத்தின்

துளைக்கையை யுடைய கஜேந்திரனது

துன்பம் தவிர்த்த

துயரத்தைப் போக்கியருளின

புனிதன்

பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற

இடம்

இடமாவது;-

பள்ளம் செறுவில் கயல் உகள

தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்களானவை துள்ளித் துள்ளிவிளையாடா நிற்க

புள்ளு

பக்ஷரிகளானவை

பழனம் கழனி அதனுள் போய்

நீர் நிலைகளையுடைய கழனிகளினுள்ளே போய்

பிள்ளைக்கு இரை தேடும்

தம் தம் குட்டிகளுக்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடப்பெற்ற

புள்ளம் பூதங்குடி;–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள்.  முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.

 

English Translation

Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top