(1469)

(1469)

துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால்,

சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே,

அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே,

திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே.

 

பதவுரை

திருவிண்ணகரானே!- ;

திருமாலே!- ;

அறம் தானாய்த் திரிவாய்

தானே ஸாக்ஷாத்தர்மமாய் ஆள்பார்த்துத் திரியுமவனே!,

சுற்றம்

(ஸம்ஸாரிகளுடன்) உறவையும்

ஆர்வம்

அன்பையும்

செற்றம்

விரோதத்தையும்

துறந்தேன்

தவிர்ந்தேன்;

துறந்தமை யால்

தவிர்ந்ததனால்,

நின் அடிக்கே

உன் திருவடிகளிலேயே

அடிமை சிறந்தேன்

கைங்கர்யம் பண்ணவுரியனானேன்;

உன்னை

உன்னை

என் மனத்தகத்தே

எனது நெஞ்சினுள்ளே

திறம்பாமல் கொண்டேன்

தவறாது தரித்துக் கொண்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ராக்ருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவும் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலைநிற்க மாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச்செய்து, ‘தேவரீர்திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன்’ என்கிறார்.  “பரித்யக்தா மயா லங்கா” (விட்டொழிந்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போலே அருளிச்செய்கிறார் காண்மின்.

அறம் தானாய்த்திரிவாய் “கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந்துண்போ மறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப் பிறவி பெறுத்தனை புண்ணியம் யாமுடையோம்” என்றாப்போலே ஸாக்ஷாத் தர்மமே வடிவெடுத்தது போன்றுள்ள தேவரீர் பலன்கொடுக்கைக்கு அவஸரம்பார்த்துத் திரியாநிற்க அடியேனிடத்தில் வேறுசில தர்மங்கள் வேணுமோ? என்றவாறு.

 

English Translation

O Lord of Tiruvinnagar!  O Lord Tirumali Righteousness personified I gave up love-hate relationships. By that, I become fit for service to your lotus feet.  I have placed you firmly in my heart forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top