(1302)
படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
பதவுரை
|
படம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து |
– |
(விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து |
|
பல் நடங்கள் செய்து |
– |
அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும் |
|
மடவரல் மங்கை தன்னை |
– |
மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை |
|
மார்வகத்து |
– |
திருமார்பிலே |
|
இருத்தினானே |
– |
நித்யமாக வைத்துக்கொண்டவனாயுமிருக்கிற பெருமானே!, |
|
துடவரை மாடம் தங்கு தகு புகழ் நாங்கை மேய |
– |
பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் பொருந்தியதும் தகுதியான புகழையுடையதுமான திருநாங்கூரில் மேவியிருக்கின்ற |
|
காவளந்தண்பாடியாய்!; |
||
|
கடவுளே ஸர்வாதிகனே! |
||
|
நீயே களைகண் |
||
English Translation
O, Krishna! You danced on the hoods of Kaliya, then took the coy lotus dame into your embrace. You reside amid mountain-like mansions of lasting fame in Nanguru’s kavalampadi. You are my sole refuge!
