(1279)

(1279)

பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,

பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,

நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,

சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

 

பதவுரை

நெல் தொடுத்த நீலம்மலர்நிறைந்த சூழல்

நெற்கதிர்களின்மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்கற் பூக்களாலே நிறைந்துள்ள சுற்றுப்புறங்களில்

இரு சிறைய வண்டஒலியும்

அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் ஆரவாரமும்

நெடு கண்ணார்தம் சிறு அடிமேல் சிலம்பு ஒலியும்

நீண்ட கண்களையுடையரான மாதர்களது சிறிய பாதங்களிலணிந்த தண்டைகளினுடைய ஓசையும்

மிழற்று

தொனிக்கப்பெற்ற

நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து, என் செங்கண் மால்!

பொன்தொடி தோள்

பொன் வளைகளணிந்த புஜங்களை உடையவளும்

மடம் மகள் தன்

ஆத்மகுணம் உடையவளுமான யசோதைப் பிராட்டியினுடைய

வடிவு கொண்ட

வேஷத்தை ஏறிட்டுக்கொண்டுவந்த

பொல்லாத வன் பேய்ச்சி

மிகவும் பொல்லாத பூதனையானவள்

கொங்கை வாங்கி

(தனது) முலையைக் கையாலெடுத்து

பெற்று எடுத்த தாய் போல மடுப்ப

பெற்றுவளர்த்த தாய்போலே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அன்புடையவள் போலக் கண்ணனது வாயில்) வைத்திட, ஆரும் பேணாநஞ்சு உண்டு உகந்த பிள்ளைகண்டீர் – ஒருவரும் விரும்பமாட்டாத விஷத்தை (முலைப்பாலுடனே) பருகி ஸந்தோஷமடைந்தசிறுவன் காண்மின்.

 

English Translation

See, the Lord who came as a child and took great relish in the detestable poison on the breast of the beautifully disguised ogress, is my senkanmai who resides of Nangur, -where the hum of bees hovering over festoons of paddy sheats and blue lotuses and the tinkle of the ankle bells on the feet vel-eyed damages mingle, -in his temple of Tirutetri Ambalam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top