(122)

(122)

சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு

ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்

சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

சேபூண்ட

எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு

சகடம்

(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலேதன் திருவடியைத் தூக்கி அச்சகடத்தை)

சிதறி

உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு

நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி

களவுசெய்து
ஆப்பூண்டு

(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு

(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)

நந்தன் மனைவி

நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடைதாம்பால்

(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளி துடிக்க துடிக்க

துடிக்க சோப்பூண்டு

அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு

(அதனோடு நல்லாமல்)

அன்று

அக்காலத்தில்
ஆப்பூண்டாள்

(எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்

அப்பூச்சி காட்டுகின்றான் ***

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சாடு – ‘சகடம்’  என்ற வடசொல்லின் சிதைவு.  ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு – ‘என் மகன் மேல் வீண் பழிவிளைத்திடேல்மின்; களவுகண்டதுண்டாகில் கையும்பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’ என்று சொல்லிய தாயான தன்முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கொண்டியோடே கண்டுபிடித்துக் கொணர அதுகண்ட யசோதை ‘நான் பிள்ளை பெற்று வளர்க்கிறது மிகவு மழகியதாயிருந்தது! ‘ என்று சொல்லித் தன்னைத்தானே மோதிக்கொண்டு அவர்கள் முன்றே தன் வயிற்றெரிச்சலெல்லாந் தோன்றும் படி அடிக்க அடியுண்டு என்றபடி.  ஆப்பூண்டு சோப்பூண்டு ஆப்பூண்டான் – ‘ஆப்பூண்டு’ ‘சோப்புண்டு’ ஆப்பூண்டான் என்பவற்றின் நீட்டல் விகாரம்.

English Translation

Once he was caught stealing butter; Nanda’s wife tied up with a churning rope and beat him as he writhed in pain.  He smote a loaded bullock cart to smithers.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top