(1206)

(1206)

நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும்,என்

முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே,

சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய

மலையாளா, நீயாள வளையாள மாட்டோமே.

 

பதவுரை

சிலையாளா

சாரங்க வில்லை அடக்கியாள்பவனே!

மாம் எய்த திறாளா

(ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தங்களால் வருஷங்களை வீழத்தொழித்த பெருமிடுக்கனே!

திரு மெய்ய மலை ஆளா

திருமெய்ய மென்னுந் திருப்பதியை ஆளுமவனே!

நிலை ஆள் ஆ நின் வணங்க வேண்டாயே ஆகிலும்

நிலைபெறற் அடிச்சியாக விருந்து உன்னை நான் வணங்கும்படி திருவுள்ளம் பற்றாமற்போனாலும்

ஒரு நாள்

ஒருநாளாகிலும்

என் முலை ஆள

எனது முலைகள் ஆட்செய்யும்படியாக

உன் அகலத்தால் ஆளாய்

உனது திருமார்பினால் அணைத்தருளுவேணும்;

நீ ஆள

உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில்

வளை ஆன மாட்டோமே

கையில் வளை தாங்காமல் துள்ளப்படவேண்டியதேயன்றோ எமக்குக் கதி.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸத்தையுள்ள வரைக்கும் உன் திருவடிகளுக்கு ஆளாயிருக்க வேண்டுவதே கடமை; ஆனாலும் இப்படி நீ திருவுள்ளம் பற்றினாலன்றி இந்த நித்ய கைங்கரியம் கிடைக்கமாட்டாதன்றோ; என்னை நித்ய கைங்கரியத்திற்கு ஆளாக்கிக் கொள்ளத் திருவுள்ளமில்லை யெனினும் ஒரு நாளாகிலும் உன்திருமேனியை எனக்குத் தந்தாலாகாதோ? இதுவும் நீ செய்யமாட்டாகில், ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்காகக்; கையிலே வில்பிடித்துக் கொண்டிருக்கிறேனென்று நீ இருப்பது ஏதுக்காக? ஸூக்ரிவனுக்கு நம்பிக்கை யுண்டாவதற்காக மராமரங்க ளேயுழைந்துளைத்த மிடுக்கையுடையவனென்று உன்னைப் புகழ்வது ஏதுக்காக? திருமெய்யத்திலே ஸத்யேசனென்று பெயர்படைத்திருப்பது ஏதுக்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியஞ் செய்யமாட்டாத வுனக்கு இப்புகழெல்லாம்  பொருந்துமோ என்கிறாள்.

நீ ஆள வளையாள மாட்டோமே-உன்னுடைய ஆளுகையிலே அடங்கியிருப்பார்க்கு) க்கையில் வளை தங்கியிருக்க ப்ராப்தியுண்டோ? என்கை.விட்டுப் பிரியாமல் கூடியிருக்குங் காலத்திலே ஸந்தோஷ மிகுதியினால் உடம்பு பூரித்து வளை வெடித்துப்போம்.  பிரிந்த காலத்திலோ உடலிளைத்து வளை சுடனறொழியும்: ஆனபின்பு ஒருபோதும் வளை தங்கியிருக்க ப்ராப்தியில்லை என்னலாம்.

முற்காலத்தில், அம்மங்கியம்மாள் என்னும் ஓர்ஆசிரிய்ர் நோயால் வருந்தியிருக்க, நஞ்சீயரும் நம்பிள்ளையும் அவரைக்கண்டு விசாரிக்க எழுந்தருளி யிருந்தனர்; அப்போது அவர் மிகவும் க்லேசப்படுவதைக் கண்டு நஞ்சீயா, ‘ஸ்வாமிந்;! தேவரிர்ஸாமாந்ய மநுஷ்யரன்றோ; எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணியிருக்கிறீர்; குணாநுவத்தாலல்லது போது போக்கியறியீர்; இப்படிப் பட்ட உம்மையும் எம்பெருமான மற்றவர்களைப்போலே இப்படி கஷ்டப்படுத்துகிறானே!’ என்றாராம்; அதற்கு அவர், “  ‘நீ யாள வளையாள மாட்டோமே’ என்றன்றோ கலியன் பாசுரம்; எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால் க்லேசப்பட்டுத் தானே யிருக்கவேண்டும்” என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளின பின் நஞ்சீயர்நம்பிள்ளையை நோக்கி, ‘பார்த்ததீரா இவருடைய அத்யவஸாயத்தை  என்ன பாசுரமெடுத்துக் காட்டினார்!’ அருளிச்செய்து மகிழ்ந்தனராம்.

 

English Translation

O, Bow wielder, strong tree-piercing archer! O Tirumeyyam-recliner! Even if you decide to spurn my devoted love for you, come one day and rub your wide chest against my risen breasts; no more will our lost bangles concern us.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top