(1191)
மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே.
பதவுரை
|
புன்னை செருந்தின்னு வண் பொழில் வாய் |
– |
புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே |
|
அகன் பனைகள் எங்கும் |
– |
விசாலமான தடாகங்களிலெங்கும் |
|
அன்னம் கலந்து மன்னும் |
– |
அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும் |
|
வயல் |
– |
வயல்தளையடைத்தாயுமிருக்கிற |
|
அணி ஆலி அம்மானே |
– |
அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!; |
|
மின்னின் மன்னுநுடங்கு இடைமடவார்தம் சிந்தை மறந்து வந்து |
– |
மின்னல் போன்று துவண்ட இடையையுடைய ஸ்த்ரிகளைப் பற்றின சிந்தனையை தவிர்ந்துவந்து |
|
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய் |
– |
உன் இணைத்திருவடிகளையே நான் நித்தியம் அநுஸந்திக் கும்படி அருள்செய்து வைத்திருக்கிறாய்; |
|
ஆல் |
– |
ஆச்சரியம்!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார்தம்முடைய பழைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் நினைந்து எம்பெருமானிடத்திலே பெருநன்றி பாராட்டுகின்றார். பிரானே! அநாதி காலமாக நான் எப்படி யிருந்தவன்; மாதரிகளின் இடையழகிலே மயங்கிக் கிடந்தவனான்றே; அப்படிப்பட்ட என்னை அவ்விஷயத்தைக் காறியுமிழ்ந்து உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டு வாழுமாறு பண்ணிவைத்தாயே!, இந்த மஹோபகாரத்தை நான் மறக்கலாகுமோ? என்கிறார். மூன்றாமடியில், பவண-‘பண்ணை’ என்பதன் தொகுத்தல்; குளம்.
English Translation
O, Lord of beautiful Tiruvali! Swans fill the lakes in the groves where Punnai and Serundi trees grow in profusion. You weaned me away from thoughts of lightning-thin-waist dames and made me hold on to your lotus feet without ever forgetting, what a wonder!
