(1177)

(1177)

தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த,

வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார்,

ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும்,

தானிவை கற்றுவல் லார்மேல் சாரா தீவினை தானே.

 

பதவுரை

தேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த

வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற

வானவர் தங்கள் பிரானை

தேவாதிதேவன் விஷயமாக,

மங்கையர்கோன்

திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்

மருவார்ஊன் அமர்வேல்

எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த)

ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும்

அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும்

கற்று வல்லார்மேல்

ஓதித் தேறினவர்களிடத்தில்

தீவினை சாரா

பாவங்கள் கிட்டமாட்டா

 

English Translation

The Lord comes surrounded by be humming flower-bowers in Tillai Tiruchitrakudam. Kalikanri the king of the Mangai tract, who wields the sharp enemy-piercing spear, has sung this garland of Tamil songs in his praise. Those who master it will never acquire evil karmas.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top