(1174)
ஆவ ரிவைசெய் தறிவார்? அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார் கைதொழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.
பதவுரை
|
மா அஞ்சனம் மலைபோலே |
– |
” பெரிய கரிய மலை போன்றதும் |
|
மேவு சினம் |
– |
மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும் |
|
முனிந்து இவை செய்வதறிவார் ஆவர் |
– |
சீறியருளினது முதலிய இப்படிப்பட்ட அருந்தொழில்களைச் செய்வதறிவார்(இக்கண்ணபிரான் தவிர) வேறு யாருமில்லை ”( என்று சொல்லி ) |
|
அழகாய காவி மலர்நெடு கண்ணார் கைதொழ |
– |
அழகிய நீலோற்பலம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக. |
|
அடல் |
– |
மிக்க வலிமையுடையதுமான |
|
வேழம் |
– |
(குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை |
|
வீழ |
– |
மாண்டொழியும் படி |
|
வீதி வருவான் |
– |
(வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன் |
|
தேவர் வணங்கு |
– |
நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற |
|
தண் |
– |
அழகிய |
|
தில்லை சித்திர கூடத்து உள்ளான் |
– |
தில்லைத்திருச் சித்திரக்கூடத்தில் ஸேவை ஸாதிக்கின்றான் |
English Translation
Who can do such things? He rolled a terribly angry rutted elephant, like a huge black mountain. Women with long lotus-lotus-like eyes lift their hands in worship when they see him come. He resides in Tillai Tiruchitrakudam.
