(1133)

(1133)

திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,

புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,

பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

 

பதவுரை

முனநாள்

முன்னொரு காலத்திலே

திண் படை

கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய

கோள் அரியின் உரு ஆய்

வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி

செருவில்

போர்க்களத்தில்

திறலோன் அகலம்

மஹாபலசாலியான இரணியனது மார்வை

புண் பட போழ்ந்த

புண்படும்படி கிழித்தெறிந்த

பிரானது

எம்பெருமானுக்கு

இடம்

இருப்பிடமாவது,

பொரு மாடங்கள் சூழ்ந்து

ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால்

அழகாய

அழகுபொலிந்திருக்கிற

கச்சி

கச்சிப்பதியிலே,

வெண் குடை நீழல்

வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு)

செங்கோல் நடப்ப

தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்)

விடம் வெல் கொடி

பாம்பாகிற வெற்றிக்கொடியையும்

வேல் படை

வேல் என்னு மாயுதத்தையும்

முன் உயர்த்த

சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும்

பண்பு உடை

நீதி தவறாதவனுமான

பல்லவர் கோன்–:

பணிந்த-:

பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும்,  “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது.  முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது.

இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது:  விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்.  எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை:  பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு,

திண்படை – நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.

 

English Translation

The strong man-lion form wielded weapons that destroyed the mighty chest of Hiranya in a fierce fight. He resides in Kanchi surrounded by thickly populated mansion. The white-parasoled scepter-holding serpent-ensign spear-wielding Pallava king comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top