(1115)
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
பதவுரை
|
இடவெந்தை எந்தை பிரானே!-; |
||
|
அலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும் |
– |
‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்; |
|
புலம் கெழு |
– |
மநோஹரமான |
|
பொரு நீர் |
– |
அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய |
|
புட்குழி |
– |
திருப்புட்புழி விஷயமாக |
|
பாடும் |
– |
பாட்டுகள் பாடாநின்றாள்; |
|
நீர்மலைக்கு போதுமோ என்னும் |
– |
திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்; |
|
குலம் கெழு கொல்லி கோமள வல்லி |
– |
மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும் |
|
கொடி இடை |
– |
வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும் |
|
நெடு மழை கண்ணி |
– |
பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை யுடையவளும் |
|
இலங்கு எழில் தோளிக்கு |
– |
விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே |
|
என் நினைந்திருந்தாய்!-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆம்பல் என்ற சொல் பலபொருள்களுடையது; இங்கு இசைச் சூழலென்னும் பொருளது. குழலூதுபவன் கண்ணபிரானாயிருக்க, அலங்கெழுதடக்கையாயன் என்று ஹலாயு தனான பலராமனைச் சொல்லிற்றென்னென்னில்; 1. “ மீனோடாமை கேழலரிகுறளாய் முன்னு மிராமனாய்த்தானாய்ப், பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்ற ஒற்றுமை நயம்தோற்றச் சொன்னபடி 2 “ அலம்புரிதடக்கையாயனே !” என்றார் கீழும்; 3. “அலமுமாழிப் படையுமுடையான்” என்பர் மேலும். குலங்கெழுகொல்லிக் கோமளவல்லி ஸ்ரீ ‘கொல்லி’ என்பதற்கே இலக்கனையால் கொல்லிமலையிலுள்ள பாவைபோன்றவள் என்று பொருள் கொள்ளலாம்; அன்றி, கொல்லி, சொல்லிமலையிலுள்ள, கோமளவல்லி–அழகிய கொடிபோன்ற பாவையையொத்தவள் என்றும் உரைக்கலாம், (கொல்லிப் பாவையைப்பற்றின விவரணம்; இத்திருப்பதிகத்தின் முதற்பாட்டினுரை யிற் காணத்தக்கது.)
நெடுமழைக்கண்ணி = பரமபக்தர்களின் நிலைமையைச் சொல்லுமிடத்து. “ஆஹ்லாதசித நேத்ராம்பு:” (குளிர்ந்த ஆநந்தபாஷ்பம் தளும்பப்பெற்றவன்) என்று சொல்லியிருக்கிறபடியே
எப்போதும் ஆழ்வார் பகவத்குணங்களை நினைந்து கண்ணுங்கண்ணிருமா யிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. பிள்ளை திருவுள்ளம்.
English Translation
“My heart breaks to hear the flute on the lips of Lotus-Lord, — he has four arms strong like the plough bull”, — she sings for the Resident of Putkuli watered by cool and fragrant water resources. “Let us got to Neermalai” says my life-like daughter. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!
