(107)
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன
மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்
நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
பதவுரை
| நச்சுவார் முன் |
– |
(தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே |
| நிற்கும் |
– |
வந்து நிற்குந் தன்மையுள்ள |
| நாராயணன் தன்னை |
– |
நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை |
| ஆய்ச்சி |
– |
இடைக்குலத்தவளான யசோதை |
|
(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) |
||
| அச்சோ வருக என்று உரைத்தன |
– |
‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை |
| மச்சு அணி |
– |
பல நிலைகளால் அழகிய |
| மாடம் |
– |
மாளிகைகளையுடைய |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு |
| கோன் |
– |
நிர்வாஹகரான |
| பட்டன் |
– |
பெரியாழ்வார் |
| சொல் |
– |
சொன்ன இப்பத்துப் பாசுரங்களையும் |
| பாடுவார் |
– |
பாடுபவர்கள் |
| நிச்சலும் |
– |
எப்போதும் |
| நின் விசும்பு |
– |
பரமாகாசமாகிற பரமபதத்திற்கு |
| ஆள்வர் |
– |
நிர்வாஹகராவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – முன்பு யசோதைப் பிராட்டிக்குக் கண்ணெதிரே நின்று கண்ணபிரான் எப்படி ஸேவை தந்தருளினனோ அப்படியே இப்போது தமக்கும் ப்ரயக்ஷமாக ஸேவை தந்தருளினதுபற்றி “நச்சுவார் முன்றிகும் நாராயணன்” என்றார்.
அடிவரவு:- பொன் செங்கமலம் பஞ்சவர் ஊறிய கழல் போர்மிக்க என்னிது கண் துன்னிய நிச்சு வட்டு.
English Translation
These words of high mansioned Puduvai town’s king Pattarbiran recall the “Acho-come-to-me” songs of Yasoda addressed to Narayana who appears before loving devotees. Those who sing it always will rule over the wide skies.
