(1014)
முனைத்த சீற்றம் விண்சுடப்போய் மூவுலகும் பிறவும் *
அனைத்துமஞ்ச வாளரியா யிருந்த வம்மான திடம் *
கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய் *
தினைத்தனையம் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே.
பதவுரை
முனைத்த சீற்றம் | – | மிக்க கோபமானது |
போய் | – | வளர்ந்து சென்று |
விண் சுட | – | ஆகாயத்தைக் கொளுத்தவும் |
மூ உலகும்பிறவும் | – | மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும் |
அனைத்தும் | – | எல்லாம் |
அஞ்ச | – | பயப்படவும் |
ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்:- | ||
கனைத்த தீயும் | – | ஒலி செய்கின்ற நெருப்பும் |
கல்லும் | – | (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும் |
அல்லா வில் உடை வேடரும் ஆய் | – | உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே |
தினை தனையும் செல்ல ஒண்ணா | – | க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான |
சிங்கவேள்குன்றம்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1014
முனைத்த சீற்றம் விண் சுடப் போய், மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச, ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம் –
கனைத்த தீயும் கல்லும், அல்லா வில் உடை வேடரும் ஆய்,
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே. (1-7-7)
***- (முனைத்தசீற்றம்.) நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.
அவ்விடம் எப்படிப்பட்டது?; எரிகிறபோதுண்டான வெடுவெடென்கிற ஓசையையுடைத்தான நெருப்பும், அந்த நெருப்பிலே வைக்கோல் போர்போலே வேகின்ற கல்லுகளும், இவற்றிற்காட்டிலும் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும் அங்கு நிறைந்திருப்பதனாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது. – “உகவாதார்க்குக் கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டிக்கண்ணெச்சில் பட வொண்ணாதபடி யிருந்த தேசமாயிற்று” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி இங்கு நோக்கத் தக்கது.
தினைத்தனையும் = தினை என்று ஒரு சிறிய தானியத்திற்குப் பெயர் ; அவ்வளவும் என்றது – ஸ்வல்பகாலமும் என்றபடி. 1. “எட்டனைப்போது” என்ற விடத்து எள் என்ற தானியத்தை யெடுத்துக்காட்டின தொக்கும் இது. 1. திருநெடுந்தாண்டகம் – 11…. (7)
English Translation
The rage of the man-lion reaching the sky, the three worlds and all else stood in fear. His abode is Singavel-Kundram where fire; rocks and bow wielding hunters make it impossible to reach the temple.
