(1550)
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே
பதவுரை
|
(திருநறையூர்ப் பெருமானே!) |
||
|
உன் அருள் என்னிடை வைத்தாய் |
– |
உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (இனி இவ்வருளை) |
|
பிறர்க்கு |
– |
வேறொருவர்க்கும் |
|
தாரேன் |
– |
விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்; |
|
கார் ஏய் கடலே |
– |
மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும் |
|
மலையே |
– |
திருமலையையும் |
|
திருக் கோட்டியூரே |
– |
திருக்கோட்டியூரையும் |
|
உகந்தாயை |
– |
திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை |
|
அடியேன் உகந்து |
– |
அடியேன் விரும்பி |
|
ஆரேன் |
– |
பர்யாப்தி பெறாதவனாகி |
|
அதுவே பருகி களிக்கின்றேன் |
– |
அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேனுடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டி யருளாமல் நீ உபேக்ஷிக்குமளவிலும் உன்னையே தொடர்ந்து நான் கூப்பிடும்படியாக இவ்வளவு அருள் என்மேல் செய்து வைத்திருக்கின்றாய்; இப்படிப்பட்ட அருளுக்கு மற்று ஆரேனும் இலக்காக வல்லாருண்டோ? இவ்வருள் பெற்றவன் நானொருவனே யாவன்; இப்படிப்பட்ட அருளை நீ வேறொருவரிடத்தில் செய்வதாயிருந்தாலும் நான் ஸம்மதிக்கமாட்டேன்; உன்னுடைய கிருபையை அநுபவித்து ஒருகாலும் பர்யாப்தி பெறாதவனாகி மேன்மேலும் அபிநிவேச முடையவனாய் அதையே அநுபவித்துச் செருக்குற்று யமாதிகள் அடியிட்டுத் திரியும்படியானேன் என்கிறார்.
பின்னடிகட்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தி காண்மின் :– “ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே அநேகம் வடிவுகொண்டு அவ்வோவிடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகில்லையென்னும்படி வர்த்தியா நின்றான்” என்று. முதலடியில், தாரேன் என்றது – தரவொட்டேன் என்றபடி.
English Translation
You showered your grace on me, I shall not share it with others, Out of love for me, you reside in the Ocean of Milk, on the hills of venkatam and in Tirukkottiyur, I keep drinking that joy without satiation.
