(1550)

(1550)

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே, உகந்தா யையுகந் தடியேனே

 

பதவுரை

(திருநறையூர்ப் பெருமானே!)

உன் அருள் என்னிடை வைத்தாய்

உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (இனி இவ்வருளை)

பிறர்க்கு

வேறொருவர்க்கும்

தாரேன்

விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்;

கார் ஏய் கடலே

மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும்

மலையே

திருமலையையும்

திருக் கோட்டியூரே

திருக்கோட்டியூரையும்

உகந்தாயை

திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை

அடியேன் உகந்து

அடியேன் விரும்பி

ஆரேன்

பர்யாப்தி பெறாதவனாகி

அதுவே பருகி களிக்கின்றேன்

அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன்



ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேனுடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டி யருளாமல் நீ உபேக்ஷிக்குமளவிலும் உன்னையே தொடர்ந்து நான் கூப்பிடும்படியாக இவ்வளவு அருள் என்மேல் செய்து வைத்திருக்கின்றாய்; இப்படிப்பட்ட அருளுக்கு மற்று ஆரேனும் இலக்காக வல்லாருண்டோ? இவ்வருள் பெற்றவன் நானொருவனே யாவன்;  இப்படிப்பட்ட அருளை நீ வேறொருவரிடத்தில் செய்வதாயிருந்தாலும் நான் ஸம்மதிக்கமாட்டேன்; உன்னுடைய கிருபையை அநுபவித்து ஒருகாலும் பர்யாப்தி பெறாதவனாகி மேன்மேலும் அபிநிவேச முடையவனாய் அதையே அநுபவித்துச் செருக்குற்று யமாதிகள் அடியிட்டுத் திரியும்படியானேன் என்கிறார்.

பின்னடிகட்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தி காண்மின் :– “ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே அநேகம் வடிவுகொண்டு அவ்வோவிடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகில்லையென்னும்படி வர்த்தியா நின்றான்” என்று.  முதலடியில், தாரேன் என்றது – தரவொட்டேன் என்றபடி.


English Translation

You showered your grace on me, I shall not share it with others, Out of love for me, you reside in the Ocean of Milk, on the hills of venkatam and in Tirukkottiyur, I keep drinking that joy without satiation.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top