(1522)
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
கல் ஆர் மதிள் சூழ் கடி |
– |
கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட |
|
இலங்கை கார் அரக்கன் |
– |
அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய |
|
வல் ஆகம் கீள |
– |
மிடுக்குடைய சரீரம் தொலையும்படி |
|
வரி வெம் சரம் துரந்த |
– |
அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த |
|
வில்லானை |
– |
சார்ங்கத்தை யுடையவனும் |
|
செல்வம் விபீடணற்கு |
– |
ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு |
|
வேறுஆக |
– |
விலக்ஷணமாக |
|
நல்லானை |
– |
அன்பனுமான எம்பெருமானை |
|
நாடி, நறையூரில் கண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அஸத்துக்களைத் தண்டித்து ஸத்துக்களைக் கைக்கொள்ளுமியல்வினன் என்பது பிரஸித்தமாகும்படி லங்காதிபதியான ராவணனைக் கொன்றொழித்தது ஸ்ரீவிவீஷணாழ்வானைப் பரிக்ரஹித்தருளின பெருமானைத் திருநறையூரில் காணப்பெற்றே னென்கிறார்.
செல்வவிபீடணற்கு = இலங்கைச் செல்வம் முழுவதையும் உதறிவிட்டு வந்து சேர்ந்த விபீஷணனைச் செல்வவிபீடண னென்றது அழியாச்செல்வமாகிய பகவத்பக்தியுடைமைபற்றியென்க. வால்மீகி முனிவனும், இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற இவ்விபீஷணாழ்வானைப்பற்றிப் பேசும்போது அந்தரிக்ஷகத : ஸ்ரீமாந்” என்றார்; அப்போது விபீஷணனிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைணவ ஸ்ரீயேயாம். இளையபெருமாள் விஷயத்திலும் கஜேந்திராழ்வான் விஷயத்திலும் இங்ஙனமே சொல்லப்பட்டதுண்டு; அயோத்திச் செல்வமனைத்தையும் துறந்து இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் “லக்ஷ்மணோ வக்ஷ்மிஸம்பந்ந :” எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த வக்ஷ்மியாவது கைங்கரியருசியாகிற வக்ஷிமியேயாம். முதலையின் வாயிலகப்பட்டுத் துடியாநின்ற கஜேந்திராழ்வான் “ஸது நாகவர : ஸ்ரீமாந்” என்னப்பட்டான்; அப்போது கஜேந்திராழ்வானுக்கிருந்த ஸ்ரீயாவது – ‘பறித்த பூ செவ்விகுலைவதற்கு முன்னே எம்பெருமான் திருவடியில் ஸமர்ப்பிக்கப் பெறவேணுமே’ என்றிருந்த அபிநிவேசமாகிற செல்வமேயிறே.
(விபீடணற்கு வேறாக நல்லானை) விபீஷணன் வந்துசேர்ந்தபோது அங்குள்ள வாநரமுதலிகள் ‘சத்ருபக்ஷத்தில் நின்றும் வருகின்ற இவனைச்சேர்த்துக் கொள்ளலாகாது; சேர்த்துக்கொண்டால் மஹத்தான கெடுதிவினையும் ‘என்று சொல்லித் தகைய, அவனைக்கைக்கொண்டே தீர்வேன்; ஒருகாலும் கைவிடமாட்டேன்’ என்று பெருமான் அருளிச்செய்ய, ‘அப்படியாகில் அடியோங்கள் கிஷ்கிந்தைக்கு மீளுகிறோம்’ என்று வாநர முதலிகள் சொல்ல ‘நீங்கள் இஷ்டப்படி செய்யலாம்; விபீஷணனைக் கைக்கொள்வதை மாத்திரம் ஒருபடியாலும் தவிரமாட்டேன்’ என்று சிக்கென அருளிச்செய்து விபீஷணாழ்வான் இடத்தில் விசேஷகடாக்ஷம் பண்ணினமை அறியத்தக்கது.
English Translation
The Lord came as a bow-wielder and killed the mighty Ravana king of ocean-girdled Lanka He is the benevolent one, good to the young vibhishana. I have found him in Naraiyur.
