(1512)
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே.
பதவுரை
|
வில் ஆர் விழவில் |
– |
(கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே) |
|
வட மதுரை விரும்பி |
– |
வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே) |
|
விரும்பா |
– |
எதிரிகளான |
|
மல் |
– |
மல்லர்களை |
|
அடர்த்து |
– |
முடித்து (அதன் பிறகு) |
|
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் |
– |
மலை போன்று திரண்ட தோள்களை யுடையனான கம்ஸனைச் சீறிக் கொன்றவனும் |
|
காளியன் மேல் |
– |
காளிய நாகத்தின் மீது |
|
பாய்ந்தான் |
– |
குதித்து அதனை வலியத்தின் வலுமான பெருமான், |
|
சொல் ஆர் சுருதி |
– |
(குற்றமற்ற) சொற்கள் நிரம்பீய வேதங்களை |
|
முறை ஓதி |
– |
முறைப்படியே அதிகரித்து |
|
சோமு செய்யும் தொழிலினோர் |
– |
ஸோமயாகம் முதலியயாகங்களை நடத்துவதைக் கருமமாக வுடையராய் |
|
நல்லார் |
– |
விலக்ஷணரான |
|
மறையோர் பலர் வாழும் |
– |
வைதிகர்கள் பலர்வாழுமிடமான |
|
நறையூர், நின்ற நம்பி-. |
||
English Translation
The Lord of Naraiyur glody went to the bow worship in old Mathura, killed the terrible wrestiers and kamsa, danced on hoods of Kaliya-snoke, Vedic seers who learn by heart the chants-of-Vedic four mantras, Daily offer oblation, through the well-kept fire-altar.
