நான்முகன் திருவந்தாதி திருமொழி – 4

(2412)

மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்

தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்

பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்

கருமாயம் பேசில் கதை.

விளக்க உரை

(2413)

கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள

உதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப்

பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ

ஆய்ந்த குணத்தான் அடி.

விளக்க உரை

(2414)

அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை

பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு – வடிப்பவள

வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,

கோப்பின்னு மானான் குறிப்பு.

விளக்க உரை

(2415)

குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,

குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,

தான்கடத்தும் தன்மையான் தாள்.

விளக்க உரை

(2416)

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,

வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,

ஐந்தலைவாய் நாகத் தணை.

விளக்க உரை

(2417)

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,

நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,

அணைப்பார் கருத் தனா வான்.

விளக்க உரை

(2418)

வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,

தானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு

கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,

அண்டந் திருமால் அகைப்பு.

விளக்க உரை

(2419)

அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்

புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன், உகைக்கு மேல்,

எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,

அப்போது ஒழியும் – அழைப்பு.

விளக்க உரை

(2420)

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,

இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே

ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை

வெருவி யரவொடுங்கும் வெற்பு.

விளக்க உரை

(2421)

வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற

நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,

கால்வலையில் பட்டிருந்தேன் காண்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top