(3836)
உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்
தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை
மருவியமாயன்றன் மாயம்நினைதொறே.
(3837)
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே.
(3838)
நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான்
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன்.
(3839)
அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
சிறியவென்னாயிருண்ட திருவருனே.
(3840)
திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து
உருவமுமாருயிரும் உடனேயுண்டான்
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே
(3841)
என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.
(3842)
காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.
(3843)
கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.
(3844)
ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்
காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.
(3845)
வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்
பாரித்து தானென்னை முற்றப்பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.
(3846)
கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்
வடிவமையாயிரத்து இப்பத்தினால்சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே.
