பெரிய திருவந்தாதி திருமொழி – 9

(2665)

பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை

இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத்

தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,

செழும்பரவை மேயார் தெரிந்து.

விளக்க உரை

(2666)

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,

வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்

அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை

அம்மானை யேத்தா தயர்ந்து.

விளக்க உரை

(2667)

அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய், – செயற்பால

அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்

மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

விளக்க உரை

(2668)

வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.

விளக்க உரை

(2669)

தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,

எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்

தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய

கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.

விளக்க உரை

(2670)

கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,

பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த

சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,

என்நினைந்து போக்குவரிப் போது.

விளக்க உரை

(2671)

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்

எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்

கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்

மெய்கழலே ஏத்த முயல்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top