(3746)

(3746)

வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,

எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,

மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,

பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.

 

பதவுரை

மொய்த்து ஏய் திரை மோது

செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற

தண் பாற்கடலுள்

குளிர்ந்த திருப்பாற்கடலிலே

வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை

படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை

மதியால்

அனுமதியாலே

எனது உள்ளத்து அகத்தே

என்னெஞ்சிலுள்ளே

வைத்தேன்

பொருந்த வைத்தேன்,

என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்

இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயிப்பது. * அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத்திரை பலமோத்தப்பள்ளி கொள்கின்ற பிரான் * என்று பெரியாழ்வார் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றதாக விளங்கிற்று.

 

English Translation

I have placed in the recess of my heart the Lord who sleeps on a hooded serpent deep in the cool ocean of Milk.  I shall never tire of contemplating him

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top