(3643)
மயக்கா வாமன னே! மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வரீவை யென்ன துயரங்களே.
பதவுரை
|
மயக்கா |
– |
எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே! |
|
வாமனனே |
– |
(அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே! |
|
மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் |
– |
எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்; |
|
துயர்ப்பு தேற்றமும் ஆய் |
– |
மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய் |
|
அழல் குளிர் ஆய் |
– |
தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய் |
|
வியவு வியப்பு ஆய் |
– |
விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய் |
|
வென்றிகள் ஆய் |
– |
(உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய் |
|
வினை பயன் ஆய் |
– |
புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய் |
|
பின்னும் |
– |
அதுக்குமேலே |
|
துயக்கு நீ ஆய |
– |
இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய் |
|
நீ நின்ற ஆறு இவை |
– |
நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள் |
|
என்ன துயரங்கள் |
– |
என்ன கஷ்டங்களாயிருக்கின்றன! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
மயக்காவாமனனே—வடிவழகாலும் நடையழகாலும் பேச்சின் இனிமையாலும் மஹாபலியைப் பிச்சேற்றி நினைத்து முடித்துக்கொள்ளவல்ல விரகனன்றோ நீ; தேவர்களின் காரியம் செய்யப்போந்த நீ அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன்கையிலே நீரைவார்த்துத் தானே யிசைந்து தரும்படி மயங்கப் பண்ணினாயே!; மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி “என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் மன்னாதருக” என்றவாறே’ தந்தேன் என்னப் பண்ணினாயே!; மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-அநுகூலர் பிரதிகூலர் என்கிற வாசியின்றிக்கே எல்லாரையும் மயங்கப்பண்ணுகை உரியதோ? நான் தெளிவையுடையேனாம்படி என்னைப் பண்ணியருளவேணும் என்கிறார்.
அயர்ப்பாய்த் தேற்றமுமாய்-பகவத்கீதையில் பதினைந்தாமத்யாயத்திலே “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸம்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்கஷச” என்கிறான். ஒன்றையறிவதோ மறப்பதோ எல்லாம் நானிட்ட வழக்கென்கிறான். அழலாய்க் குளிராய்-சீதமும் உஷ்ணமும் தானிட்டவழக்கு. வியவாய் வியப்பாய்-ஆச்சரியப்படத்தக்க பொருள்களும் ஆச்சர்ய மென்கிற தருமமும் தானிட்ட வழக்கு. வென்றிகளாய்-வெற்றியைச் சொன்னது—பிரதிகோடியான தோல்வியையும் தெரிவிக்கும். ஜயாபஜயங்கள் தானிட்ட வழக்கென்கை, வினையாய்ப் பயனாய்-வினையென்று புணயபாப ரூபய்களான கருமங்களிரண்டையுஞ் சொல்லுகிறது. பயனென்று அவற்றின் பயனான ஸுகதுக்கங்களைச் சொல்லுகிறது.
பின்னும் நீ துயக்காநின்றவாறு – அதற்குமேலே, உன்னை யடிபணிந்தாகும் மதிமயங்கும்படி நீநிற்கிறவிதம் என்னே!. இவை என்ன துயரங்களே! – இவையுனக்கு லீலையாயிருந்தாலும் உலகுக்குத் துயரமாயிருக்கின்றதே யென்கிறார்.
English Translation
O Deceiving Manikin! Pray tell me, that I may understand ignorance and knowledge, heat and cold, wonders and trivia, victory and despair, use and wastefulness are you; what travails are these?
