(3642)

(3642)

பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,

நீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே! அருளாய்,

காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,

மாயங்கள்¦ சய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே.

 

பதவுரை

வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே

நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!,

நீ

இப்படிப்பட்ட நீ,

என்னை பாசங்கள் நீக்கி

எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து

உனக்கே அற கொண்டிட்டு

உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து

காயமும் சீவனும்

பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்

கழிவு பிறப்பு ஆய்

இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,

பின்னும்

பின்னையும்

நீ மாயங்கள் செய்து வைத்தி

அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்;

இவை என்ன மயக்குக்கள்

இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன!

அருளாய்

அருளிச்செய்ய வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷகடாக்ஷிம் பண்ணிவைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.

பாசங்கள் நீக்கி யென்றது –  மயர்வறமதிநலமருளியென்றபடி. உனக்கே அறக்கொண்டிட்டு—துயரறுசுடரடிதொழுதெழு என்னும்படி பண்ணியென்றபடி.

வாசமலர்த் தண்டுழாய்முடிமாயவனே!—புறம்புண்டான பற்றுக்களை யறுத்ததும் தனக்கே யற்றுத் தீரும்படி பண்ணினதும் திருமுடியிலே சாத்தின் திருத்துழாய் மாலையினழகைக் காட்டியன்றோ. வென்கை. அருளாய்-என்னையிப்படி யீடுபடுத்திக்கொண்டது இங்கே வைத்து நலிவதற்காகவோ, அருளிச்செய்யவேணும்,

மூன்றாமடியின் கருத்து; –  தேஹமோ ஆத்மாவோ உத்பத்தி விநாசங்களோ எல்லாம் நீயிட்ட வழக்கன்றோ. இப்படி ஸர்வநிர்வாஹகனான நீ அவித்யாதிகளாகிற வஞசனங்களைப் பண்ணி வைக்கின்றாயே! இவையென்ன தெரியாச் செயல்கள்!

 

English Translation

Fragrant-Tulasi-blossom-Lord! Pray tell me. You rid me of my desires and took me as your own; body, breath, birth and death are you.  The many wondrous acts are yours, what deceptions are these?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top