(3512)
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பையர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.
பதவுரை
| மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு |
– |
திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும் |
| பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு |
– |
படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும் கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு |
| திருக்கைகளும் திருவடிகளும் சிவந்திருக்கப்பெற்றவனுமான கண்ணபிரான விஷயத்திலீடுபட்டதனால் | ||
| என் தையல் இழந்த்து |
– |
என் மகள் இழந்தது |
| தன்னுடை சாய் |
– |
தனது ஒளியாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மெய்யமர்பலகலன்) இப்பாட்டில் “என்தையலிழந்த்து தன்னுடைச்சாய்“ என்கிறாள். சாயா என்னும் வடசொல் சாய் எனத்திரிந்த்து. சாயையாவது ஒஒளி. லாவண்ய மிழந்தாளென்கை. உரு வேறுபாடுற்ற ளென்றவாறு.
மெய்யமர் பல்கலன்நன்கணிந்தானுக்கு – * செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல் விரவில்சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கலவைம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமொத்திலக* என்கிறபடியே ஸகல திவ்யாபரணங்களுமணிந்துகொண்டு விளங்குவது என்னோடு ஸம்ச்லேக்ஷிக்கைக்காகவன்றே, அது செய்யாமையாலே இத்தனையும் காட்டி லெறித்த நிலாவாகா நின்றதே! என்கிறா ளென மகள்.
பையரவின்ணைப் பள்ளியினானுக்கு – திருவனந்தாழ்வானொருவனையேதான் படுக்கையாயக் கொள்ளவேணுமோ? * சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையா மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு * என்கிறபடியே ஸகலவிதி கைங்கரியங்களையும் அவனொருவனிடத்திலேயே கொண்டு சேஷனென்னும் பெயர் அவனுக்கேதான் தரவேணுமோ? என்னையும் சிறிது சேஷப்படுத்திக் கொண்டாலாகாதோ வென்கிறா ளென்மகள். அன்றியே, *பரவியேன் தோன்றிப் பரம்பணையார்க்கும் தம்பாம்புபோல் நாவுமிரண்டுள வாயிற்று நாணிலியேனுக்கே * என்கிறபடியே இரட்டை நாவுடையனான பாம்பரசனோடே கலந்துபழகி இப்படி பொய்யனாய்விட்டானே! என்று தளர்கின்றா ளென்மகள் என்னவுமாம்.
கையொடுகோல்செய்ய கண்ணபிரானுகு –நீலத்தடவரையிலே செந்தாமரை பூத்தாற்போலே பச்சை மாமலைபோன்ற திருமேனிக்குப் பரபாகமாகக் கைபுங்காலும் சிவந்து விளங்கம்படியான ஆச்சரியமா அழகுபடைத்திருப்பது என்னோடே கலக்கைக்கா வென்றிருந்தேன், அந்தோ! அப்படியில்லையே! என்று தளர்கின்றா ளென்மகள் என்கிறாள் திருத்தாய்.
English Translation
My fair daughter has lot her ornaments, -to the Lord who wears many good ornaments and reclines on a hooded couch, to Krishna, whose hands and feet are red.
