(3447)

(3447)

திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா மரைமேல்,திசைமுகன்

கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,

பொருவி லுந் தனி நாயகமவை கேட்குந் தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,

அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே.

 

பதவுரை

திரு உருவு கிடந்த ஆறும்

அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும்

கொப்பூழ்செம் தாமரை மேல்

திருநாபிக் கமலத்திலே

திசைமுகன் கரு உன்

நான்மகனாகிற கருவுக்குள்ளே

வீற்றிருந்து

அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து

படைத்திட்ட கருமங்களும்

ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற

பொரு இல்

எதிரில்லாத

உன் தனி நாயகம் அவை

உன்னுடைய பரத்வ ப்ரகாசமான அவற்றை

கேட்கும்தோறும்

(வேதாந்திகன் சொல்லல்) கேட்கிறபோதெல்லாம்

என் நெஞ்சம்

என் நெஞ்சானது

நின்று நெக்கு

கட்டுக்குலைந்து நெகிழ்ந்து நின்று

கண் நீர் அருவி சோரும்

கண்ணீர் அருவியாகப் பெருகாகின்றது;

அடியேன் என் செய்கேன்

தரித்திருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (திருவுருவு.) காரணமான ஏகார்ணவஜலத்திலே அழகிய திருமேனியோடே கண்வளர்ந்தருளினது ஸ்ருஷ்டிக்காக. பிறகு அந்தத் திருமேனியில் திருநாபிக் கமலத்திலுண்டான நான்முகனை அதிஷ்டித்து நின்று ஸத்வாரகமாக ஸகலக்ருஷ்டியும் செய்தபடி. இப்படிப்பட்ட விலக்ஷணகுண சேஷ்டிதங்களைக் கேட்குந்தோறும் என்னெஞ்சம் நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவிபோலே சோராநின்றது; இதனால் ஒன்றும் ஒழுங்குபட நினைக்க முடியவில்லையே! என்றாராயிற்று.

 

English Translation

Whenever I hear about your beautiful reclining form, about the red lotus-navel with Brahma seated on it, about your entering the wombs in your great acts of creation, and your peerless domain over all, my heart melts and tears food my eyes.  O what can I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top