(3377)

(3377)

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,

ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம்

மண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,

எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே?

 

பதவுரை

பெண் பிறந்தார் எய்தும்

பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற

பெரு துயர் காண்கிலேன் என்று

பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி

ஒண் சுடரோன்

ஸூரியன்

வாராது ஒளித்தான்

வாராதே மறைந்து போனான் போலும்

இ மண் அளந்த

இப்பூமியை யளந்து கொண்டவனும்

பெரிய கண்

பரந்த திருக்கண்களையுடையவனும்

செம்வாய்

சிவந்த அதரத்தையுடையவனும்

எம் கார் எறு

கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான்

வாரான்

வந்து முகங்காட்டுகின்றிலன்;

ஆல்

அந்தோ!

எண்பெரிய

நினைக்கவும் முடியாத

சிந்தை நோய்

மனோவியாதியை

என்னை

என்னிடத்தில் நின்றும்

தீட்பார்

நீக்கவல்லவர்கள்

ஆர்

யார் சொல்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பெண் பிறந்தாரென்னும்) சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும்வழி என்னோ! என்கிறான்.

இரவு முப்பது நாழிகை கழிந்தவாறே ஸூரியன் உதிப்பதென்று ஒரு நியதியுண்டு; ***   என்று உபநிஷத்தும் ஓதிவைத்தது; அப்படியிருக்க அந்த ஸூர்யன் உதிக்கவேயில்லை; ‘பெண்ணாய்ப் பிறந்தவர்கள் படும் துன்பத்தைக் காண்பதிற் காட்டிலும் நாம் முடிந்துபோவதே நன்று’ என்று துணிந்து அவன் முடிந்து போயினன் போலும் என்கிறாள். இரவு மிகவும் செல்லுகின்றமையை இங்ஙனம் கூறினாளாயிற்று.

ஒண்சுடரோன் வாராதொளித்தான் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி:- “தன் தோற்றரவிலே ஸகலலோகமும் போம்படியான ப்ரகாசத்தையுடையவனும் வாராதே  மறைந்தான். **  என்னாரே ஒளிந்தானென்கிறது- *இத்யாதிப்படியே பகவதாஸ்ஸஞயாலே முப்பது வட்டம் வர வேணுமே; இங்ஙனே யிருக்கிறான் ***   மறுத்தால் வேணுமாகில் தலையையறுத்து வைக்குமித்தனையன்றோ இக் கொடுமை என் கண்ணால் காணப்பாகா’ என்று ***  தேடி வந்தாலும் காணாதபடியொளித்தான்.”

ஸூர்யன் வந்தாலென்ன, ஒளிந்தாலென்ன? அவனைக் கொண்டு நமக்கொரு காரியமில்லையே. வடிவழகு முதலியவற்றால் என்னைத் தோற்பித்து எனக்குப் பரமயோக்யனாயிருந்தவன் எழுந்தருளிக்காட்சி தரவில்லையே; என் சிந்தை நோயைத் தீர்க்கவல்லனான அவன் வர திருக்கிறபடியாலே இனி என் சிந்தை நோய் அநுபவித்தே கழிக்குமித்தனைபோலும் என்றாளாயிற்று.

 

English Translation

Even the radiant Sun has hidden himself, unable to bear the sight of a maiden in distress.  My black bull, the Lord with large eyes and red lips does not come.  Alas, who can cure my love-sickness?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top