(3343)

(3343)

உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,

வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,

கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,

வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!

 

பதவுரை

வெள்ளத்து

திருப்பாற்கடலிலே

அணை

(திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது

கிடந்தாய்

பள்ளிகொள்ளும் பெருமானே!

உள்ளன

எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன்

மற்று உள் ஆ

உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும்

புறமே

வெளிவேஷமாக,

வள்ளல் மணி வண்ணனே என்று என்றே

வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும்

சில மாயம் சொல்லி

சில பொய்யுரைகளைச் சொல்லி

உன்னையும் வஞ்சிக்கும்

(ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான

கள்ளம் மனம் தவிர்த்து

கபடமான நெஞ்ச தவிரப்பெற்று

உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்

உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்;

இனி

இனிமேல்

உன்னை விட்டு

பரமயோக்யனான உன்னைவிட்டு

என் கொள்வன்

வேறு எதைக் கைக் கொள்ளுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உள்ளன) முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக்கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடுகூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.

மனத்தினுள் நடையாடுகின்ற எண்ணங்களோ வேறுபட்டவை; வெளியே வாயாற் சொல்லுகிறவாசகங்களோ புறப்பூச்சான பொய்யுரைகளேயாம்; எம்பெருமானுடைய ஔதார்யம் முதலிய குணங்களிலும் வடிவழகிலும் மிக ஈடுபட்டவன்போல ‘வள்ளலே! மணிவண்ணனே!’ என்று பலகாலுஞ்சொல்லி * உள்ளவாருள்ளிற்றெல்லா முடனிந்தறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படியான கள்ளமனமுடையவனானகவே யிருந்தேன்; அப்படிப்பட்ட நான் அந்தக் கள்ளமனம் தவிரப்பெற்ற உஜ்ஜீவிக்கவல்லவனாயினேன். இனி வேறுவழிகளிலே செல்ல ப்ரஸக்தியில்லை என்றாயிற்று.

“வஞ்சக்கள்வன் மாமாயன்” என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிற எம்பெருமானையும் வஞ்சிக்கவல்லவனாயினேன் என்பது தோன்ற ‘உன்னையும்’ என்று உம்மைகொடுத்துப்பேசினார்.

 

English Translation

I uttered in lip-service,-while inside was something else, -a few lies like “Benevolent Lord, Gem-hued Lord” and such words. Shedding my deceiving nature, I have seen you, and found liberation. O Lord reclining in the ocean, now what other refuge do I have?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top